இவர் ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டன் ; ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ?

இந்திய மாற்றம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்றுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், 2 – 1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோசமான தோல்விக்கு என்ன காரணம் ?

முதல் ஒருநாள் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தான் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தினார். அப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி வென்றது. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடிய போட்டியில் இந்திய அணி மோசமாந நிலையில் தோல்வி பெற்றுள்ளது.

ஆமாம், இரண்டாவது போட்டியில் வெறும் 117 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய. அதுமட்டுமின்றி, மூன்றாவது போட்டியில் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே வந்தது இந்திய.

ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு இல்லையா ?

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரோஹித் சர்மா. இதுவரை ரோஹித் சர்மா தலைமையில்லாம மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

அதனால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றால் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று நினைத்து கொண்டு வந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் மோசமான நிலையில் வெளியேறியது இந்திய.

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 13, 30 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். கேப்டனாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் ரோஹித் சர்மா பங்காளிக்கவில்லை என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சரியா ??? தவறா? அடுத்த கேப்டன் யாராக இருந்தால் சிறப்பாக இருக்கும் ?