தோனி இல்லை ; இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் ; மொயின் அலி .. யாராக இருக்கும் ?

England vs India 2021: நேற்று மதியம் எதிரான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 191 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 11 ரன்கள்,ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்கள், விராட்கோலி 50 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 10 ரன்கள், ரஹானே 14 ரன்கள், ரிஷாப் பண்ட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து அணி எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் பவுலர் ஷர்டுல் தாகூர் டி-20 போட்டி போல 36 பந்தில் 57 ரன்களை விளாசினார்.

அதனால் இந்திய அணிக்கு 191 ரன்களை எடுத்துள்ளது. பின்பு முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 53 ரன்களை எடுத்த நிலையில் 3 விக்கெட்டை இழந்துள்ளது. போட்டிக்கு இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான மொயின் அலி அளித்த பேட்டியில்;

எனக்கு எப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜாவை தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவரது ஆட்டம் மற்றும் அவர் பீல்டிங் செய்யும் முறை உண்மையாகவே அற்புதமாக இருக்கும். ஒருவேளை நான் கேப்டனாக ஏதாவது கிரிக்கெட் அணியில் இருந்தால் நிச்சயமாக அவருக்கு இடம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் மொயின் அலி.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 19ஆம் தேதி அன்று மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.