இவர் ஆர்.சி.பி. அணியில் விளையாடிவிட்டார்..! ஆனால் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் ; விராட்கோலி ஓபன் டாக் ;

கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் போட்டிகளில் டாப் இடத்தில் உள்ளது இந்திய, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சில வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

உதாரணத்திற்கு சவுத் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டிவில்லியர்ஸ். இந்திய கிரிக்கெட் அணியில் தோனி, சச்சின், விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் சிலர்க்கு தோனியை பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது என்பது தான் உண்மையே. ஆமாம், ஆனால் டிவில்லியர்ஸ் அப்படி இல்லை.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவர் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்துள்ளார். அதில் விராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்துள்ளது தான் உண்மை.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விராட்கோலி அளித்த பேட்டியில்; எனக்கு தெரிந்து டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் மட்டுமின்றி சிறந்த மனிதரும் கூட. அவருடைய விளையாட்டை பற்றி யாரும் பேச முடியாது. ஏனென்றால் அவர் மற்றவர்கள் பேசும் அளவிற்கு விளையாடமாட்டார்.

நான் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருக்கும்போது, அவர் அதனை ஆறு மாதங்களில் செய்து காட்டியுள்ளார். ஆனால் நான் இந்திய அணியில் முக்கியமான இடத்தை கைப்பற்ற குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியது. ஆனால் அவர் அதனை குறைவான நேரத்தில் செய்துகாட்டினார் டிவில்லியர்ஸ்.

எனக்கு தெரிந்து மற்ற எந்த வீரரும் அவரை போல பார்ம்மை விரைவாக கொண்டு வர முடியுமா என்று. கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி அவர் வாழ்க்கையிலும் முன்னேறிக்கொண்டு செல்கிறார், அவர் எப்பொழுது என்னுடைய முன்னுதாரணமாக இருக்கிறார் டிவில்லியர்ஸ்.

வாழ்க்கையில் அவர் எடுத்த சரியான முடிவுகளை இப்பொழுது பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய வாழ்கை தான் இறுதியான ஒன்று. இந்திய அணியில் டில்வில்லியர்ஸ் விளையாட என்று எனக்கு மிகப்பெரிய ஆசை உள்ளது. அவர் இந்திய அணியில் விளையாடினால் அதனை ரசிகர்கள் அவருக்காக காத்திருக்கின்றனர்.

இப்பொழுது இந்திய மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடைபெற்று வருகிறது, அதில் டிவில்லியர்ஸ் இருந்தால் நிச்சியமாக பேட்டிங் செய்யும்போது பல இந்திய ரசிகர்கள் டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ் என்று சத்தம் போடுவது வழக்கம் தான்.

இதுபோன்ற ஒன்று அனைவருக்கும் நடக்காது. அப்பொழுது எங்களுக்கே குழப்பமாக இருந்தது, என்ன நடக்கிறது என்று ஆனால் இது போன்ற விஷயங்கள் இவருக்கு மட்டுமே நடக்கும் என்று கூறியுள்ளார் விராட்கோலி.