போட்டியின் தொடக்கத்தில் இது நடந்துவிட்டால் நிச்சியமாக தோல்வி தான் கிடைக்கும் ; ரிஷாப் பண்ட் வருத்தம்..!

ஐபிஎல் 2022: நேற்று நடந்த 10வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்…!

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான மெத்திவ் வெட் 1 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் இந்த முறை சுமன் கில் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய ரன்களை குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் அடித்துள்ளனர்.

அதில் சுமன் கில் 84, விஜய் ஷங்கர் 13, ஹார்டிக் பாண்டிய 31, மில்லர் 20, ராகுல் திவேதிய 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ரிஷாப் பண்ட் மட்டுமே அதிரடியான ஆட்டத்தை விளையாடி கொண்டு இருந்த போதும், சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

அதனால் இறுதிவரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையிலோ 157 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அசத்தலான பவுலிங் செய்த குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் குஜராத் அணி 3வது இடத்திலும், டெல்லி அணி 4வது இடத்திலும் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் ; ” எதிர் அணி அடித்த ரன்கள் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மிடில் ஓவரில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவர் ப்ளேவில் விக்கெட்டை இழந்ததால் ரன்களை அடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.”

” முதலில் மூன்று விக்கெட்டை இழந்தால் நிச்சியமாக கடினமாக தான் இருக்கும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சுழல் உருவானது. வானிலையை பொறுத்தும் அணியின் வெற்றி இருக்கும். ஆனால் நாங்கள் இப்பொழுது அதனை பற்றி யோசிக்கவில்லை.”

“நாங்கள் போட்டியில் தோல்வி பெற்றது வருத்தமாக இருந்தாலும், அதில் இருந்து தவறுகளை சரி செய்யவேண்டும் என்பது தான் எங்களது எண்ணமாக உள்ளது என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட். இதுவரை 2 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு போட்டியில் வென்றுள்ளனர்.