இவரை நிச்சயமாக அணியில் இருந்து நீக்கமுடியாது ; கோலி அதிரடி முடிவு

இதுவரை மூன்று டி-20 போட்டிகளில் நடந்து முடித்துள்ளது. அதிலும் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா அணி ஒரு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி இரு போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். இன்னும் இருக்கு இரு போட்டியில் நிச்சயமாக இந்தியா அணி வெற்றி பெற வேண்டும்.

அப்படி வெற்றி பெறாவிட்டால் நிச்சயமாக இந்தியா அணி டி-20 கோப்பையை வெல்ல முடியாமல் போய்விடும். ஆனால் இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும் கோப்பையை கைப்பற்ற. அதனால் இனி வரும் போட்டிகள் நிச்சியமாக சுவாரஷியம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா அணியின் டாப் பேட்ஸ்மேன் சரியாக விளையாடவில்லை. கே.எல் .ராகுல் இதுவரை விளையாடிய மூன்று போட்டியிலும் சேர்த்தி ஒரு ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அணியில் இருந்து எடுக்க வென்றும் என்று சமூகவலைத்தளங்களில் கருத்தை பகிர்ந்து வருகிறார்.

பதிலளித்த விராட் கோலி கேப்டன் ; கே.எல்.ராகுல் மிகவும் அருமையான வீரர், அவர் அணியில் ஒரு முக்கியமான வீரர். அவர் நிச்சியமாக ரோஹித் ஷர்மாவுடன் களம் இறங்குவார் என்று கூறியுள்ளார். அதனால் கே.எல்.ராகுல் நிச்சியம் இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.

டி-20 போட்டிகளில் முதலில் சில விக்கெட்டை இழந்தால் நிச்சயமாக பல கேள்விகள் எழும்? போட்டியை வெல்லவோமா? நல்ல ரன்கள் எடுக்க முடியுமா? என்ற பல கேள்வி எழும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் அவர் 83 ரன்களை அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.