இந்த இரு வீரர்கள் இல்லாமல் இந்தியா அணி முழுமையான அணியாக இருக்காது ; மைக்கேல் வாகன் கருது !!

இங்கிலாந்து மாற்றும் இந்தியாவுக்கான டி-20 போட்டிகளை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதிலும் மூன்று போட்டிகள் நிலையில் இரு (2) போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு (1) போட்டியில் இந்தியா அணியும் வென்றுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகள் இந்தியா அணிக்கு மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் 5 போட்டியில் 3 வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் இங்கிலாந்து அணி இப்பொழுது இரு போட்டிகளில் வென்றுள்ளனர். அதனால் அவர்கள் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதும். அனால் இந்தியா அணி வருகின்ற இரண்டு நிச்சயமாக வென்றே ஆக வேண்டும்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் , டி-20கான போட்டி ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணியை ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பேசி கொண்டே இருந்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் எதற்கு ஐபிஎல் அணியையும் இந்தியா அணியையும் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா அணிக்கு ஒரு முழுமையான அணி இன்னும் அமையவில்லை அதனால் தான் அவர்கள் மிகவும் கடினமாக போட்டிகளை விளையாடி வருகின்றனர். இந்திய அணிக்கு நிச்சயமாக பௌலர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா தேவை படுகின்றனர்.

இந்த இரு சீனியர் வீரர்களும் இந்தியா அணியில் இருந்தால் தான் ஒரு முழுமையான அணியாக இந்தியா இருக்கும். அனால் பும்ரா இப்பொழுது அவரது கல்யாண வேளையிலும் , ஜடேஜாவுக்கு அவரது காய் விரலில் அடிப்பட்டதால் அவரால் இந்தியா னையில் விளையாடவில்லை என்றும் கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.

இந்தியா அணியில் மிகவும் கடினமான அணி இந்த உலகத்தில், இதனை நான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் புரிந்து கொண்டேன். இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வீரர்கள் இல்லை, அதே போல தான் இந்தியா டி-20 அணியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் வாகன்.

இன்று மாலை 7 மணி அளவில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.இன்று விளையாடும் போட்டி இந்தியா அணிக்கு மிகவும் முக்கியமானது என்றே சொல்லலாம். அணியில் நிச்சயமாக சிறிது மாற்றம் இருக்கும் எதிர்பார்க்க படுகிறது. இன்றைய பொடியை வெல்லுமா இந்தியா அணி ?