முன்னாள் இந்தியா கேப்டன் தல மகேந்திர சிங் தோனி கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக தகவல் அறிவித்தார். அதனால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அவரை மீண்டும் சென்னை அணியில் ஒரு கேப்டனாக பார்க்க முடியும் என்று ஒரு ஆசையும் சந்தோஷமும் எல்ல கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இன்னும் இருக்கிறது.
![](https://tamil.crickopedia.com/wp-content/uploads/2021/03/Dhoono.jpg)
![](https://tamil.crickopedia.com/wp-content/uploads/2021/03/Dhoono.jpg)
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர் கொள்ள போகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் மிகவும் மோசமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்ந்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே -ஆஃப் சுற்றுக்குள் வராமல் வெளியேறியது. அதனால் நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளிப்படுத்த வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.
முன்னாள் இந்தியா கேப்டனுக்கு இன்று முக்கியமான நாள் …ஏன் தெரியுமா? விவரம் இதோ..!
2015 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பங்காளதேஷ்க்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதில் முக்கியமானது இந்தியாவுக்கு கேப்டனாக தோனி 100 போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளார். அதில் ரோஹித் சர்மா 126 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வீரர்கள் தான் இப்படி செய்துள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனாக 165 போட்டிகளில் வென்றுள்ளார். பார்டர் 107 போட்டிகளில் கேப்டனாக வெற்றிபெற்றுள்ளார், அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 100 போட்டிகளில் வென்றுள்ளார்.