மீண்டும் மீண்டும் இந்தியா கிரிக்கெட் வீரர்களை சீண்டிக்கொண்டே இருக்கிறார்? ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர் ; முழு விவரம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளார். முதலில் களம் இறங்கிய இந்தியா வீரர் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

20 ஓவர் முடிவில் 124 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதன்பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் 15.3 ஓவரில் இந்தியாவை வென்றது. இந்தியாவின் மோசமான தோல்வியை சுட்டிக்காட்டிய மைகேல் வாகன் இந்தியா அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளோவோ மேல் என்ற பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் இவருக்கு பைத்தியமா என்ன ? எதற்கு இந்தியா கிரிக்கெட் அணியை ஒரு ஐபிஎல் அணியிடம் சேர்த்து ஏன் பேசுறீர்கள் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் பேசப்பட்டனர்.

நேற்று முடிந்த இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் 32 பந்தில் 56 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நல்ல பேட்டிங் செய்துள்ளார். அதனால் 17.5 ஓவரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா கிரிக்கெட் அணி.

இதனை சுட்டி காட்டி மீண்டும் இந்தியா வீரர்களுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனால் மீண்டும் இவரது கருது குறித்து சமூகவலைத்தளங்களில் இவருக்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன.