கண்கலங்கிய தோனி…. காரணத்தை கேட்ட ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்…..! அப்படி என்ன காரணம் ….?

நடப்பு ஆண்டின் ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இதுவே ஆம். ஏனென்றால் கோரோணா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளது பிசிசிஐ.

இதுவரை 41 போட்டிகள் சிறப்பாகவும் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டி. கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 41வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் சரியான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் ருதுராஜ் 0 ரன்கள் , டுபலஸிஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பவர்-ப்லே யில் 5 விக்கெட்டை பறிகொடுத்தது சிஎஸ்கே அணி.

நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்கள். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக் மற்றும் இஷான் கிஷான் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 115 ரன்களை எடுத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தனர். சென்னை அணியை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது மும்பை அணி.

கண்கலங்கிய தோனி…. காரணத்தை கேட்ட ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்…..! அப்படி என்ன காரணம் ….?

இதுவரை 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியேறுவது. நாங்கள் எவ்வளவு தூரம் கடினமாக உழைத்தாலும் கடைசியில் தோல்விதான். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை அதனால் தான் அவர்கள் விளையாடவில்லை. மிகவும் வேதனையாக தான் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் இருப்பது. ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை சிஎஸ்கே அணி வெளிப்படுத்தும்.