இதை சொல்வதால் ஒரு அவமானமும் இல்லை ?? விராட்கோலி அதிரடி பேட்டி !! என்ன நடந்தது ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சரியாக ரன்களை அடிக்காமல் முதல் 2 ஓவரில் இரு விக்கெட்டை இழந்தது இந்திய. அதனால் சற்று ரன்களை அடிக்க முடியாமல் கடினமாக இருந்தது.

பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அதனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் இறுதி வரை விராட்கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை அடித்து கொடுத்தார். அதில் கே.எல்.ராகுல் 3, ரோஹித் சர்மா 0, விராட்கோலி 57, சூர்யகுமார் யாதவ் 11, ரிஷாப் பண்ட் 39, ரவீந்திர ஜடேஜா 13, ஹார்டிக் பாண்டிய 11 மற்றும் புவனேஸ்வர் குமார் 5 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியமால் இறுதி ஓவர் வரை தினறிக்கொண்டு இருந்தனர். அதனால் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 9 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

போட்டி முடிந்த பிறகு விராட்கோலி அளித்த பேட்டியில் ; முதல் இரு விக்கெட்டை இழந்தும் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி உள்ளனர். இதனை சொல்வதால் எந்த அவமானமும் இல்லை என்பது தான் உண்மை… !!!