வீடியோ : சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்…! மெய்ச்சிலிர்த்து போன சிஎஸ்கே ரசிகர்கள்

இந்தியாவில் வருகின்ற 9 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெற போகிறது. அதனால் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற போகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகல் ஐக்கிய அரபு நாட்டில் நடந்த போட்டி சென்னை சூப்பர் கிங்க அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சிஎஸ்கே 6வது இடத்தில் இருந்ததால் , ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் வராமல் வெளியேறிவிட்டது.

அந்த நிகழ்வு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு 2021 நிச்சியமாக வெற்றிபெற வேண்டும் என்று சிஎஸ்கே, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த முறை ரெய்னா சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம் , மெயின் அலி, ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.அதனால் சிஎஸ்கே அணி வலுவாக என்று கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனியை , தனிமை காலம் முடிந்த பிறகு அவர் பார்க்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட நாட்கள் களித்து தோனியை ரெய்னா அவரை கட்டித்தழுவினார். அந்த விடியோவை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

ஐபிஎல் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுதுவரை தோனி மற்றும் ரெய்னா. அதுமட்டுமின்றி இவர்களுக்கு இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது. ஏனென்றால் தோனி அவரது சர்வதேச போட்டியில் இருந்து விலகிய அதே நாளில் ரெய்னாவும் அவரது சர்வதேச போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி நிச்சியமாக காம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். முதல் போட்டி வருகின்ற 10ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.