Qualifier 1: நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த முதல் ப்ளே – ஆப் சுற்றில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.


அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் 188 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பின்பு 189 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி.
தொடக்க வீரரான சஹா எந்த ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால், பின்னர் பொறுமையாக விளையாடிய குஜராத் வீரர்கள் 19.3 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.


அதில் சுமன் கில் 35, வெட் 36, ஹர்டிக் பாண்டிய 40, டேவிட் மில்லர் 68 ரன்களை அடித்துள்ளனர். இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையில் தான் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சரியாக போட்டி முடியும் 19.6 பந்தை வீசினார் யாஷ் டயல், அதனை எதிர்கொண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின். இறுதி பந்தில் முடிந்த அவரை ரன்களை அடித்துவிடாமல் என்று பந்தை வீசிய உடன் ரியல் பராக் ஓடினார். ஆனால் அந்த பந்து Wide என்ற காரணத்தால் அதனை விட்டுவிட்டார்.
— Renuga Devi (@RenugaD30190107) May 25, 2022
ஆனால் ரியல் பராக் ஓடி வந்த காரணத்தால் குஜராத் வீரர்கள் அதனை சரியாக புரிந்து கொண்டு ரன் – அவுட் செய்தார். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது கோபத்தில் இருந்தார் ரியான் பராக். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. யாராக இருந்தாலும் இரு பந்தல் முடிந்த வரை ரன்களை அடிக்க முயற்சி செய்வது தான் வழக்கம்.
அதேபோல தான் ரியன் பராக் செய்துள்ளார். வீடியோ பார்த்துவிட்டு யார் மேல் தவறு என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.!