வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.


அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் போட்டிக்கான அணியை ரோஹித் சர்மாவும், டி-20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்டிக் பாண்டியாவும் வழிநடத்த உள்ளனர். இதில் ரிஷாப் பண்ட் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து வந்துள்ளார் ரிஷாப் பண்ட்.
விபத்தில் சிக்கிய ரிஷாப் பண்ட் :
இன்று அதிகாலையில் இந்திய வீரரான ரிஷாப் பண்ட் டெல்லியில் இருந்து ரூற்கீ சென்று கொண்டு இருக்கும்போது. இடையே அவரது கார் விபத்தில் சிக்கியது. அதில் கார் தீப்பற்றி எரிந்தது. அதில் ரிஷாப் பண்ட் -க்கு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அதன் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
भारतीय क्रिकेटर और विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत का रुड़की के गुरुकुल नारसन क्षेत्र में एक्सीडेंट। डिवाइडर से टकराने के बाद गाड़ी में लगी आग। ऋषभ पंत गंभीर रूप से घायल, देहरादून के अस्पताल में भर्ती।#Rishabpant pic.twitter.com/jG5zrwqKdl
— Swapnil Verma (@Swapnil10Verma) December 30, 2022