இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் பேராதரவு பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இல்லாததால் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9விக்கெட் இழந்த நிலையில் 177 ரன்களை எடுத்துள்ளனர்.
பின்பு 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 16.3 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதனால் 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது.
அதிலும் விராட் கோலி 72 ரன்கள் மற்றும் தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்துள்ளனர். இதனை குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இந்த போட்டியை பற்றி பேசிய அவர்; நிச்சியமாக தேவ்தத் படிக்கல் சிறப்பான ஒரு பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு நிச்சியமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க அதிகம் இருக்கிறது.
அதுமட்டுமின்றி இவரது ஆட்டம் அதிரடியாக இருப்பதால் நிச்சியமாக டி-20, ஒருநாள் அல்லது டெஸ் போட்டிகக்கில் ஏதாவது போட்டியில் கண்டிப்பாக விளையாடுவாட் என்று சுனில் கவாஸ்கர். இதுவரை ஐபிஎல் 2021யில் 3 போட்டிகளில் விளையாடி 137 ரன்களை அடித்துள்ளனர் .