தோனியை சீண்டிய முன்னாள் இந்தியா வீரர் விமர்சனம் செய்துள்ளார்… யார் அந்த வீரர் ? அப்படி என்ன சொன்னார்?

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போல் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த ஆண்டு மைதானத்தில் இருக்க அனுமதி என்ற செய்தியும் வெளியானது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட்டில் சில தவறுதல் செய்ததால் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு விளையாட தடைவிதிக்கபட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாட போவதாக அவரது சமுகவலைத்தளங்களில் ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் ஐபிஎல் 2021 போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியலில் வெளியானது. அதில் ஸ்ரீசாந்த்யின் பெயர் இடம்பெற இல்லை. அதனால் மனம் உடைந்த ஸ்ரீசாந்த் பல கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் விடியோவை பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி தல என்றால் அது ஒருவர் மட்டும்தான் அதுவும் தமிழ்நாடு நடிகர் தள அஜித்குமார் தான் என்று தோனியை மறைமுகமாக தாக்கியுள்ளார். அதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.

ஏன் ஸ்ரீசாந்த் ஐபிஎல் 2021 போட்டியில் இடம்பெறவில்லை?

ஸ்ரீசாந்த் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை அதனால் நிச்சயமாக அவரால் சரியாக விளையாட முடியாமல் போகுது. அதுமட்டுமின்றி இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் டோனியை எதிர்த்து பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

அதுமட்டுமின்றி அணியில் இடம் பெற்றால் நிச்சயமாக சகபோட்டியாளர்களுடன் நிச்சயமாக சண்டை ஏற்படுவார் என்ற காரணத்தால் அவரை ஐபிஎல் 2021 வீரர்களின் பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை.