வீடியோ : நம்ம அஸ்வின் கிட்டயேவா..! கூக்ளி பந்து வீசி சிறப்பாக விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின்; பேட்ஸ்மேன் ஷாக் ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைப்பெற்று முடிந்துள்ளது மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர். கடந்த 14ஆம் தேதி அன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் ஸ்ரீ பங்களா சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது இரண்டாவது டெஸ்ட் போட்டியில். இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் அதிகப்படியான ரன்களை அடிக்க வேண்டுமென்று முடிவு செய்த பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏனென்றால், தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்ததால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் பங்களாதேஷ் வீரரான மொமினுள் சிறப்பாக பேட்டிங் செய்து 84 ரன்களை விளாசினார். அவரது விக்கெட் இழந்த பிறகு பங்களாதேஷ் அணியால் ரன்களை அடிக்க முடியாத நிலை உருவானது. சரியாக 73.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பங்களாதேஷ் அணி 227 ரன்களை அடித்துள்ளனர்.

அதில், ஷாண்டோ 24, சாகிர் ஹசன் 15, மொமினுள் 84, ஷாகிப் 16, ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்-ல் விளையாட தொடங்கியது இந்திய. இதுவரை 8 ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில் 19 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 3*, சுப்மன் கில் 14 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இதற்கிடையே பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான ஷான்டோ விக்கெட்டை கைப்பற்றினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. 15.2 ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூக்ளி பந்தை எதிர்கொண்டார் ஷான்டோ. அப்பொழுது அது LBW ஆனது. விக்கெட் என்ற கேட்ட சில நிமிடங்கள் கழித்து விக்கெட்டை கொடுத்தார் நாடுவார். பின்னர் டிவி நடுவரிடம் பார்த்த போது அது நடுவரின் தீர்ப்பு தன இறுதியானது என்ற காரணத்தால் ஷான்டோ விக்கெட்டை இழந்தார்.