பும்ராவுக்கே Tough கொடுப்பார் போல ..! இங்கிலாந்து அணியை சூறையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டி20 போட்டிக்கான தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து இப்பொழுது ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த காரணத்தால் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிக முக்கியமான ஒன்று. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் நடந்த மாற்றம் :

இந்திய அணியின் முன்னணி வீரராக திகளும் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். அதுமட்டுமின்றி முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக மாறினார் பும்ரா. அதேபோல, இரண்டாவது போட்டியிலும் 2 விக்கெட்டை கைபற்றியுள்ளார். ஆனால் இன்றைய போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக முகமத் சிராஜ் அணியில் இடம்பெற்றார்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆமாம், முதல் போட்டியை போலவே இங்கிலாந்து அணியின் பரிஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் போன்ற முக்கியமான விக்கெட்டை கைபற்றியுள்ளார் முகமத் சிராஜ். அதனால் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here