கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கிய டி-20 போட்டிக்கான தொடரில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர்.
மூன்றாவது டி-20 போட்டிக்கான விவரம்:
டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பேட்டிங் செய்து டார்கெட் செட் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆமாம், தொடக்க வீரரான இஷான் கிஷான் 1 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்பு சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபதி ஆகிய இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து 70க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார். அதனால் இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது. பின்பு டி-20 போட்டியின் கதாநாயகன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடித்தது இந்திய. அதில் இஷான் கிஷான் 1, சுப்மன் கில் 46, ராகுல் திரிபதி 35, சூர்யகுமார் யாதவ் 112*, ஹர்டிக் பாண்டிய 4, அக்சர் பட்டேல் 21* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இலங்கை.
இதுவரை விளையாடிய இலங்கை அணி 10 ஓவர் முடிவில் 91 ரன்களை அடித்த நிலையில் 4 விக்கெட்டை இழந்துள்ளனர்.
அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ்:
இலங்கை அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் சுமாராக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மூன்றாவது (இன்றைய) போட்டியில் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி ரன்களை குவித்தார். அதிலும் 51 பந்தில் 112 ரன்களை அடித்துள்ளார் சூர்யா. இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அதில் அடங்கும்.
இதில் சூரியகுமார் யாதவ் பின்னால் அடித்த சிக்ஸர் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. சரியாக 12.2 ஓவரில் மதுஷங்க வீசிய பந்தை எதிர்கொண்டார் சூரியகுமார் யாதவ். பந்தை துல்லியமாக கவனித்த சூரியகுமார் யாதவ் சிறப்பாக பின்னால் சிக்ஸர் அடித்துள்ளார்.
3rd T20I hundred for Suryakumar Yadav from just 43 innings💥
— Prashant Umrao (@ippatel) January 7, 2023
What an inning by #SuryakumarYadav 100 in just 45 balls. pic.twitter.com/92LMpshGLv