தாகிர் கொடுத்த பதிலடியில் சிஎஸ்கே வீரர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் கொண்டாட்டம் !!!!

ஐபிஎல்2020 போட்டி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 6 வது இடத்தில் உள்ளது. பல தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தான் காரணம் , கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பல ரசிகர்கள் கூறியுள்ளார். சமுகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

கடந்த சீசன் ஐபிஎல் 2019ஆம் ஆண்டு போட்டியில் அதிகம் விக்கெட் எடுத்த வீரர் மற்றும் இம்ரான் தாகிர் ஏன் இந்த ஆண்டு போட்டிகளில் ஏன் விளையாடவில்லை ?? என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கு இன்னிங்ஸ் பிரேக்கில் வீரர்களுக்கு குளிர்பானம் கொடுக்கும் வகையில் பணியாற்றி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் கேலி கிண்டல் செய்து வருகின்றன. இதனை பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இம்ரான் தாகிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்…. !!!

விளையாடும் என்னோட அணி வீரர்களுக்கு குளிர்பானம் கொண்டு செய்துவது ஒன்று தவறு இல்லை ஏனென்றால் நான் அணியில் விளையாடும் போது எனக்கும் சில வீரர்கள் கொடுத்துள்ளர். நான் அணியில் விளையாடுவதும் விளையாடவில்லை என்பதும் வேறு!! அணி வெற்றிபெற வேண்டும் அதுதான் நோக்கம்…. !! என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உயர்த்தி கூறியுள்ளார் இம்ரான் தாகிர்…..!!!