இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர்கள் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; கோலியின் அதிரடி கருத்து…!

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் , 5 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு எடுத்தது பிசிசிஐ . அதன்படி சமீபத்தில் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகள் முடிந்த நிலையில் இன்று மாலை 1:30 மணி அளவில் ஒருநாள் நாள் போட்டி தொடங்க உள்ளது.

டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா கிரிக்கெட் அணி. இதனால் மனம் வேதனை அடைந்த இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

டி-20 போட்டிகளில் 4 போட்டியில் வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் இறுதி டி-20 போட்டியில் கோலி மற்றும் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் நான் இனிமேல் டி-20 போட்டிகளில் நான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓப்பனிங் செய்வோம் என்று கூறியுள்ளார் இந்தியா அணியின் கேப்டன்.

இதனால் வருகின்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோழி மற்றும் ரோஹித் சர்மா தன ஓப்பனிங் செய்வார்கள் என்ற சமூகவலைத்தளங்களில் கருது பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று நடந்த உரையாடலில் தவான் மற்றும் ரோஹித் சர்மா தான் ஓப்பனிங் செய்வார் என்று கோலி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் தவான் மிகப்பெரிய வீரர் என்றும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து நல்ல ரன்களை எடுக்கும் திறனுள்ள வீரர் தான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கோலி. அதனால் இன்று மதியம் 1:30 அளவில் புனேவில் உள்ள MCA உள்ளது முதல் ஒருநாள் போட்டி.

ரசிகர்கள் அனுமதியா? இல்லையா?

கொரோனா தாக்கம் சற்று இந்தியா அதிகமாக இருப்பதால் மீண்டும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் போது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று அரசாங்கம் கூறியுள்ளனர். அதனால் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.