இவங்க சரியாக விளையாடவில்லை ; ஆனால் தோல்விக்கு முக்கியமான காரணமே இதுதான் ; தோனி ஓபன் டாக் ;

நேற்று நடந்த போட்டி :

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. பின்னர் போக போக பார்ட்னெர்ஷிப் அமையாமல் இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்தது பெங்களூர் அணி.

அதில் விராட்கோலி 30, டூப்ளஸிஸ் 387, மஹிபால் 42, தினேஷ் கார்த்திக் 26 ரன்களை அடித்தனர். பின்பு 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால், இறுதிவரை கடினமாக விளையாடிய சென்னை அணியாழ் 160 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது பெங்களூர் அணி. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 56, ருதுராஜ் கெய்க்வாட் 28, அம்பதி ராயுடு 10, மொயின் அலி 34 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்து பேசிய தோனி ;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கூறுகையில் ; எங்களால் அவரைகளை 170 ரன்களுக்குள் மடக்க முடிந்தது. அதன்பின்னர் தான் யோசனை செய்தேன், சிறப்பான தொடக்க ஆட்டம் அமைய வேண்டுமென்று. தொடக்கத்தில் நாங்கள் என்ன யோசனை செய்தோமோ, அதனை சரியாக தான் தொடர்ந்து கொண்டு சென்றோம்.

ஆனால் பேட்டிங்கில் தான் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. போட்டியின் தொடக்கத்தில் சரியான தொடக்க ஆட்டம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, எங்கள் கையில் அதிக விக்கெட் இருந்தன. ஆனால் சில நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம்.

செய்த தவறை சற்று திரும்பி பார்த்தால் போதும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம். ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலர் தான் போட்டியின் இடையில் என்ன செய்ய வேண்டுமென்று, யோசிக்க வேண்டும், அப்பொழுது தான் அணியின் வெற்றியை உறுதி படுத்த முடியும். எனக்கு தெரிந்து அது ஒன்றும் கவலை இல்லை. புள்ளிபட்டியலில் எத்தனை புள்ளிகள் உள்ளது என்பதை கவனித்தால் நிச்சியமாக போட்டியில் சரியாக விளையாட முடியாது என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.