விராட்கோலி ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் ; வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். ஏனென்றால் இந்த முறை இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. ஆமாம், டி-20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டியிலும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அதிலும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் ரன்களை அடிக்கவே முடியாமல் போனது. தொடர்ந்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி இறுதியாக 110 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. அதில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் 1 விக்கெட் வித்தியாசத்திலும் 30க்கு மேற்பட்ட ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

சமீப காலமாக இந்தியா அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய விளையாடுவது இல்லை. அதேபோல தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளிலும் அப்படி தான். அதனால் பல முன்னாள் வீரர்கள் விராட்கோலியை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

அதே நேரத்தில் விராட்கோலி முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை அவருக்கு (விராட்கோலி)க்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்குமோ என்று..! இதற்கு பதிலளித்த பிசிசிஐ, விராட்கோலி-யின் இடுப்பில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தான் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை என்று தகவல் வெளியானது. இன்று மாலை 5 :30 மணி அளவில் தொடங்க உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட்கோலி இருப்பாரா இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் வெளியான தகவலின் படி அவருக்கு இன்னும் காயம் சரியாக நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட்கோலி விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் விளையாட போகிறார்.

விராட்கோலி இந்திய அணிக்கு எந்த அளவிற்கு முக்கியமான வீரர் ? அவருக்கு மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ? உங்கள் கருத்துக்களை மறக்கமால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!