இதை தான் செய்ய வேண்டுமென்று சொன்னேன், ஆனால் யாரும் கேட்கவில்லை ; ரோஹித் சர்மா பேட்டி ;

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 65வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தொடங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் ஆட்டம் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்தனர். அதி அபிஷேக் சர்மா 9, பிரியம் கார்க் 42, ராகுல் த்ரிப்தி 76, பூரான் 38 ரன்களை அடித்தனர்.

பின்பு 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் மிடில் பேட்ஸ்மேன் டேனியல் சாம்ஸ், திலக் வர்மா தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும், டிம் டேவிட் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் டிம் டேவிட் எதிர்பாராத வகையில் ரன் – அவுட் ஆனார். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை மட்டுமே அடித்தனர். வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

அதில் ரோஹித் சர்மா 48, இஷான் கிஷான் 43, டேனியல் சாம்ஸ் 15, திலக் வர்மா 8, டிம் டேவிட் 46, ராமன்தீப் சிங் 14 ரன்களை அடித்தனர். போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கூறுகையில் ; “இறுதி இரு ஓவர் இருக்கும்வரை நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.”

“ஆனால் எதிர்பாராத வகையில் டிம் டேவிட் ரன் அவுட் ஆகிவிட்டார். சத்தியமாக அந்த ரன் அவுட் வரை நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அவர் மட்டும் இருந்திருந்தால் நிச்சியமாக இறுதி ஓவரில் 19 ரன்களை அடித்திருக்க முடியம்.”

“ஆனால் நிச்சியமாக வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் இந்த முறை செய்யும் அனைத்து தவறுகளையும் நாங்கள் கவனித்து கொண்டு தான் வருகிறோம். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் இருக்கும் பவுலர்கள், முக்கியமான நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலிங் செய்ய வேண்டும்.”

“ஆனால் அதனை பயன்படுத்திய சன்ரைசர்ஸ் அணி 193 ரன்களை அடித்துள்ளனர். தொடக்கத்தில் நாங்கள் சரியாக ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். எங்களால் முடிந்த வரை அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்து கொண்டு தான் வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”