CSK அணிக்கு எதிரான போட்டியில் என்னுடைய கனவு நினைவானது ; ரஷீத் கான் பேட்டி ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஷீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடித்தார். அதனால் 20ஓவர் முடிவில் 169 ரன்களை அடித்தது சென்னை அணி. அதில் ருத்ராஜ் 73, உத்தப்ப 3,மொயின் அலி 1, ராயுடு 46, ஷிவம் துபே 19, ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை அடித்தனர்.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி. தொடக்கத்தில் ஐந்து விக்கெட்டை விரைவாக இழந்த குஜராத் அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மில்லர் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது தான் உண்மை.

குஜராத் அணி ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதில் அதிகபட்சமாக மில்லர் 94 ரன்களை ஆட்டம் இழக்காமல் விளையாடியுள்ளார். இதனையடுத்து தோல்வியை சந்தித்த சென்னை அணி 9வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டிய இந்த போட்டியில் இல்லாத காரணத்தால் அணியை ரஷீத் கான் வழிநடத்தியுள்ளார் . சென்னை அணியை வென்ற பிறகு அளித்த பேட்டியில் ; “இன்னைக்கு என்னுடைய கனவு நினைவானது. ஆமாம், நான் ஒரு அணியை வழிநடத்த வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டது உண்டு. அது இன்று நிறைவேறியது.”

“எங்களால் இறுதி 7 ஒவேரில் 90 ரன்களை அடிக்க முடியும், அதுதான் எங்கள் பிளான். அதுமட்டுமின்றி, முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் போட்டியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டுமென்று தான் நாங்கள் முடிந்த வரை போராடினோம். நான் முதல் ஐந்து போட்டிகளில் பேட்டிங் செய்யவேயில்லை.”

“ஒரு கேப்டனாக நான் பொறுப்பேற்று அணியை வழிநடத்த வேண்டும் என்று தான் களமிறங்கினேன். அதில் ஏதாவது இரு பேட்ஸ்மேன் அதிக ரன்களை அடிக்க வேண்டிய சூழல் உருவானது. அதனால் தான் மில்லர் மற்றும் நானும் அதிரடியாக விளையாடினோம். நான் என்ன பிளான் செய்தேனோ, அதனை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ரஷீத் கான்.”

ரஷீத் கான் பேட்டிங் செய்த சில பந்துகளை அடிக்க தெரியாதது போல விளையாடினார், ஆனால் சில நிமிடங்களில் அதிரடியான பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார் என்பது தான் உண்மை. 21 பந்தில் 40 ரன்களை விளாசியுள்ளார் ரஷீத் கான். குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இந்த முறை அசைக்க முடியாத ஒரு அணியாக குஜராத் டைட்டன்ஸ் உள்ளது தான் உண்மை. ஒருவேளை இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணி கோப்பையை வெல்லுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here