Thug Life கட்டிய தோனி …. ! மாஸ் செய்த சிஎஸ்கே கேப்டன்..!! காரணம் இதோ ….!

Thug Life கட்டிய தோனி …. ! மாஸ் செய்த சிஎஸ்கே கேப்டன்..!! காரணம் இதோ ….!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி… ஐபிஎல்2021 ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 8வது ஐபிஎல் 2021 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 107 ரன்களை எடுத்தனர். அதனால் 6 விக்கெட் வித்தியசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சிஎஸ்கே. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதல் போட்டியில் 188 ரன்களை எடுத்தும் சிஎஸ்கே அணியின் பவுளர் சரியாக பந்து வீச வில்லை. அதனால் தோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் அதற்கு அப்படியே மாற்றாக நடந்துள்ளது. பக்காவாக பவுலிங் செய்த சிஎஸ்கே முதல் 6 ஓவரில் முக்கியமான 5 விக்கெட்டை கைப்பற்றியது.

இப்பொழுது சமுகவலைத்தளங்களில் தோனி Thug-Life செய்கிறாரா?? என்ற பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்ன தெரியுமா…?? முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்ததால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு 12லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

ஆனால் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 90 நிமிடங்களுக்குள் போட்டியை முடித்துள்ளார் கேப்டன் தோனி. நிச்சியமாக இதில் தோனி மாஸ் காட்டியுள்ளார் என்று சமுகவலைத்தளங்களில் கருத்து தெரிவுத்து வருகின்றனர். தோனி ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். அடுத்த சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.