VIDEO ; ஆட்டம் இழந்த விராட்கோலி செய்த செயல் வைரலாக பரவி வருகிறது ;

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 60 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதிலும் நேற்று இரவு நடந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங்கை சேட்டை முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமைந்தது. பரிஸ்டோவ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி 209 ரன்களை அடித்தனர். அதில் பரிஸ்டோவ் 66, ஷிகர் தவான் 21, லிவிங்ஸ்டன் 70, மயங்க் அகர்வால் 19 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

ஆனால் தொடக்க ஆட்டம் சரியாக அமையாத காரணத்தாலும், பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தாலும் திணறியது பெங்களூர் அணி. இறுதி ஓவர் வரை போராடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக விராட்கோலி 20, டூப்ளஸிஸ் 10, ரஜத் படிடர் 26, கிளென் மேக்ஸ்வெல் 35 ரன்களை அடித்துள்ளனர். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதற்கிடையில், விராட்கோலி செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.

4வது ஓவரில் பவுலிங் செய்தார் பஞ்சாப் வீரர் ராபாட , அதனை எதிர்கொண்டார் விராட்கோலி. அப்பொழுது பந்தை அடித்த விராட்கோலி, அதனை ராகுல் சஹார் கேட்ச் பிடித்துவிட்டார். இதனால் விரக்தி ஆன விராட்கோலி, வானத்தை பார்த்து புலம்பிய காட்சி இப்பொழுது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ :