நான் இந்த மாதிரி யோசித்தது மிகவும் தவறாக போய்விட்டது ; மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஓபன் டாக் ;

இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 177 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 41, இஷான் கிஷான் 81, அன்மோல்பரீட் சிங் 8, திலக் வர்மா 22, பொல்லார்ட் 3, டிம் டேவிட் 12, டேனியல் சாம்ஸ் 7 ரன்களை அடித்துள்னனர்.

பின்பு 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதில் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையாமல் போனது. ஆனாலும் இறுதிவரை போராடிய டெல்லி அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர்.

அதில் ப்ரிதிவி ஷாவ் 38, டிம் செய்பிரட் 21, ரிஷாப் பண்ட் 1, லலித் யாதவ் 48, ஷர்டுல் தாகூர் 22 மற்றும் அக்சர் பட்டேல் 38 ரன்களை அடித்தனர். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் பவுலிங் மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு சாதகமாக மாறியது தான் உண்மை. இதனை பற்றி பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “நான் 177 என்பது நல்ல ரன்கள் தான் என்று நினைத்துவிட்டேன்.”

“அதிலும் இந்த மாதிரி ஒரு பிட்ச்-ல் இவ்வளவு ரன்களை அடிக்க முடியுமா என்று நினைத்தேன். அதிலும் எங்கள் பேட்டிங் தொடக்கத்திலும் சரி முடிவிலும் சரி சிறப்பாக விளையாடுவது தான் உண்மை. ஆனால் பவுலிங் நாங்கள் நினைத்த மாதிரி விளையாடவில்லை.”

“முதல் போட்டியில் வெற்றி பெற்றே ஆகா வேண்டுமென்று நான் சொல்ல மாட்டேன். எங்களை பொறுத்த வரை முதல் போட்டியாக இருந்தாலும் சரி இறுதி போட்டியாக இருந்தாலும் சரி, எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி மட்டுமே யோசனை செய்வோம்.”

நாங்கள் யோசித்த மாதிரி எதுவும் சரியாக நடக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் நிச்சியமாக ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா..! மும்பை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!