இந்திய அணியில் இப்படி நடக்கும் என்று நான் அனைவரிடமும் சொல்லிவிட்டேன் ; சூரியகுமார் யாதவ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை ; ரோஹித் பேட்டி

ஹாங் காங் அணியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய மற்றும் ஹாங் காங் போட்டியின் விவரம் :

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிசாகட் கான் தலைமையிலான ஹாங் காங் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங் ஆங் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தில் சற்று சோர்வான ஒரு போட்டியை பார்க்க முடிந்தது. அதற்கு முக்கியமான காரணமாக கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடியது தான்.

இருப்பினும் ரன்களை தொடர்ந்து அடித்தனர் இந்திய வீரர்கள். பின்பு விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்தது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 36, ரோஹித் சர்மா 21, விராட்கோலி 59, சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை அடித்துள்ளனர்.பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹாங் காங் அணி.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரையோ அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய ஹாங் காங் அணியால் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41, கின்சீட் ஷா 30, ஸிஸ்ஷன் அலி 26 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை சூப்பர் 4 லீக் சுற்றுக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. இதுவரை குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய அணியும், குரூப் ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ததில் சிறப்பாக விளையாடினோம்.”

“நாங்கள் அவர் (சூரியகுமார் யாதவ்) விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து கொண்டு தான் வருகிறோம். அதேபோல தான் இன்றைய போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். அவரது பேட்டிங் திறனை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்துள்ளார் சூரியகுமார்.”

“ஆனால் இன்றை போட்டியில் அவர் அடித்த ஷாட்ஸ் நிச்சியமாக யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான். அதனை பார்க்க அவ்வளவு ஆர்வமாக தான் இருந்தது. அவர் விளையாடும் போது ஷாட்ஸ் தேர்வு செய்யும் முறை மிகவும் முக்கியமான ஒன்று. எங்களுக்கு நன்கு தெரியும் அவர் அனைத்து பக்கமும் அடிப்பார் என்று.”

“அதுமட்டுமின்றி எங்கள் அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுப்போம், அதனால் அனைவரும் அதற்கு தயாராக தான் இருக்கின்றனர். அதுதான் எங்களுக்கு தேவையான விஷயம். இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா..!”