சற்றுமுன் ; மீண்டும் ஒரு இந்திய வீரர் காயம் காரணமாக உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் ; First பும்ரா , Next இவரா ..!

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு வாய்ப்பு பஞ்சம் இருக்காது..!

இந்திய கிரிக்கெட் அணி :

சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநா போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி தான் தொடரை கைப்பற்றிய நிலையில் இப்பொழுது ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

15 பேர் வீரர்கள் கொண்ட பட்டியலில் : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட்பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் தொடங்கும் முன்பு காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா. அதன்பின்பு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக யார் மாற்று வீரராக இருக்க போகிறார் என்று பலர் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதனை தொடர்ந்து சற்று முன் வெளியான தகவலின் படி காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பும்ராவிற்கு பதிலாக காத்திருப்பு பட்டியலில் இருந்து இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் தீபக் சஹார் இடம்பெறுவார் என்று பலர் நினைத்து கொண்டு வந்தனர். ஆனால் இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here