தாகூருக்கு பதிலாக இந்த இளம் வீரருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் இந்திய அணிக்கு வெற்றி தான் ; பார்திவ் பட்டேல் பேட்டி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளால் இந்திய அணி வென்று 2 – 0 என்ற முன்னிலையில் உள்ளது இந்திய. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் ஆவது ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ் அணி ?

இப்பொழுது விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியை மனதில் வைத்து தான் விளையாடி வருகின்றனர். இன்னும் இரு மாதங்களுக்கு பிறகு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் 21 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்த்து ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

இன்று இரவு 7 மணியளவில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் ஒருநாள் போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் நிச்சியமாக பல மாற்றங்கள் இருக்கும். ஏனென்றால் ஒருநாள் போட்டிக்கான தொடரை இந்திய அணி வென்றுவிட்டது.

அதனால் இன்றைய போட்டியில் விளையாடாத பல வீரருக்கு வாய்ப்புகளை நிச்சியமாக ராகுல் டிராவிட் வழங்குவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; “நான் அர்ஷதீப் சிங் பவுலிங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்க்க ஆசைப்படுகிறேன்.”

“அதனால் ஷர்டுல் தாகூர் அல்லது முகமத் சிராஜ் போன்ற வீரர்களில் ஏதாவது ஒருவருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் அது மிகவும் நல்லது தான். அதிலும் அர்ஷிதீப் சிங் டி-20 போட்டிகளில் எப்படி விளையாடுவார் என்பதை நாம் பார்த்துள்ளோம்.”

“ஆனால் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 10 ஓவர் வீசும்போது தான் அவரது திறமை என்னவென்று அனைவருக்கும் தெரிய வரும் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here