இந்த இரண்டு பேர் மட்டும் இல்லையென்றால் இந்திய அணியின் நிலைமை மிகவும் மோசமாக மாறிருக்கும் ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

மூன்றாவது ஒருநாள் போட்டி :

ஒருவழியாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இங்கிலாந்து அணி பேட்டிங் :

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. முதல் இரு விக்கெட்டை விரைவாக இழந்தாலும் ஒருவர் பின் ஒருவராக அதிரடியாக விளையாட தொடங்கினார்கள்.

அதனால் இறுதி வரை விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 259 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 41, பரிஸ்டோவ் 0, ரூட் 0, பென் ஸ்டோக்ஸ் 27, ஜோஸ் பட்லர் 60, மொயின் அலி 34, லிவிங்ஸ்டன் 27, வில்லே 18 ரன்களை அடித்தனர்.

இந்திய அணியின் இலக்கு:

260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்க வீரரான ஷிகர் தவான் எதிர்பாராத வகையில் 1 ரன்களை அடித்த நிலையில் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால், இருவரும் தலா 17 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தனர். அதனால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் செய்த அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணி வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியது. ஆமாம், 42.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 261 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது இந்திய.

ரோஹித் சர்மா பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதுவும் இங்கு (மான்செஸ்டர்) மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஒரு அணியாக வென்றது மிகவும் அருமையாக உள்ளது. கடந்த முறை நாங்கள் இங்கு தோல்வி பெற்று திரும்பினோம்.”

“இன்னும் அது நினைவில் உள்ளது. இந்த இடத்தில் வந்து விளையாடி வெல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதிலும் இன்றைய போட்டியில் நாங்க தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்துவிட்டோம். அதில் இருந்து மீண்டு வருவோமா இல்லையா என்பது பற்றி எனக்கு சந்தேகம் இருந்தது.”

“இதில் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய சிறப்பாக விளையாடினார்கள். கடந்த இரு போட்டிகளில் பெரிய அளவில் மிடில் ஆர்டர் விளையாடாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தோம். இவங்க இருவரும் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பயப்படுவார்கள் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.”

“அவர்கள் (ஹார்டக், ரிஷாப்) இருவரும் ஒருவர் மற்றொருவரை ஆதரித்து கொண்டு விளையாடி வந்தனர். எங்கள் அணியில் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர் தான் யுஸ்வேந்திர சஹால். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இவரது விளையாட்டை இந்த அளவிற்கு மாறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.”

“அதேபோல தான் ஹர்டிக் பாண்டியவும், சிறப்பாக பவுன்சர் பந்துகளை வீசுகிறார். எங்கள் அணியின் டாப் ஆர்டர் பற்றி கவலை இல்லை, ஏனென்றால் ஒருசில நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்த ஷாட்ஸ் அடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் அவருடைய தரம் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும்.”

“எங்கள் அணியில் ப்ளேயிங் 11 ஐ தாண்டி இருக்கும் மற்ற வீரர்களை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் காயம் என்பது எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர்களுக்கு நிச்சியமாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here